Breaking News
Loading...
Friday 20 September 2013

Info Post

அமரர் மாரிமுத்து மகாலிங்கம்
பிறப்பு : 12 மார்ச் 1949 — இறப்பு : 19 ஓகஸ்ட் 2013

மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து மகாலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி,

விஜய வருட உயர் ஆவணி திங்கட்கிழமை
மூன்றாம் நாள் பூர்வபட்ஷ சதுர்த்தி திதியில்
நீண்ட புகழ் கொண்ட மகாலிங்கம்
நல்லான் மறைந்த நாள்.

அன்புள்ள அப்பா

தூரம்போய் திரும்பி
வருவீர்கள் என நினைத்து
காத்திருக்கிறோம்,
நாட்கள் கடந்தாலும்
உம் நினைவுகள் எம்முடனே,
எம்மைவிட்டு போகவில்லை - அப்பா
நீங்கள் எம்முடன் இருக்கிறீர்கள்
பாசத்தோடு எம்மை காத்து வந்த
எங்கள் அன்புத் தந்தையே..!

தனியாகத் தவிக்கவிட்டு ஏனப்பா சென்றீர்கள்
இன்னும் பல ஆண்டுகள்
எம்மோடு இருப்பீர்கள்
என்றல்லவா நினைத்தோம்..!
கண்ணிமைக்கும் நேரத்தில்
காலன் கொண்டுசென்றான்..
கடைசி நிமிடம்
என்ன சொல்ல நினைத்திருப்பீர்கள்...!

நினைத்துப்பார்க்கிறோம்...
நீங்கள் வாழ்ந்தது உங்களுக்காக அல்ல
எங்களுக்காகவே.
ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கும் பிள்ளைகள்....

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதியழகன் மகாலிங்கம் — நோர்வே
செல்லிடப்பேசி: +4740048695

0 comments:

Post a Comment