மரண அறிவித்தல்
-----------------------
திருமதி அமிர்தலிங்கம் செல்வக்குணவதி
அன்னை மடியில் : 15 டிசெம்பர் 1950 — ஆண்டவன் அடியில் : 3 டிசெம்பர் 2010
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. சங்: 116:15
யாழ்ப்பாணம், வட்டுகிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மன்னார் சாவற்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமர்தலிங்கம் செல்வக்குணவதி அவர்கள் 03.12.2010 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சட்டநாதபிள்ளை சிவயோகம் தம்பதிகளின் மூன்றாவது மகளும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, மகிழம்மா ஆகியோரின் மருமகளும்,
போதகர். வினாசித்தம்பி அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தீபன், சுபா, ரூத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகிர்தா, சுரேஸ், கெனிஸ்ரன் ஆகியோரின் மாமியாரும்,
றுபின் அவர்களின் பேத்தியும்,
காலஞ்சென்ற சித்திராதேவி, மற்றும் பேராம்பிகை, ஸ்ரீமுருகன், ஸ்ரீசண்முகவேல், தவநாயகி, தவரஞ்சினி, ஸ்ரீசெந்திவேல், தவனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
முத்துலிங்கம், நாகேஸ்வரி, அன்னம்மா, கனகலிங்கம், தர்மலிங்கம், மகேந்திரி, இராசலிங்கம், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், மற்றும் புஸ்பராணி, பரமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இந்தியாவில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் ------------------ தொடர்புகளுக்கு: ஸ்ரீசெந்திவேல் — பிரித்தானியா செல்லிடப்பேசி- +447904438436 சுரேஷ் — இலங்கை தொலைபேசி- +94232222371 செல்லிடப்பேசி-+94771723576 |
0 comments:
Post a Comment